மீண்டும் பிணந்திண்ணி
மீண்டும் ஒருநாள் எங்களின்
தோள்களும் மார்புகளும் வெட்டப்படும்
வளர வளர வெட்டி எடுக்கப்படும் தோள்களும்
விரிய விரிய அழுத்தப்படும் மார்புகளும்
தனக்குத்தானே தட்டிக் கொள்கிறன.
மீண்டும் ஓர் வயதானப் பிணந்திண்ணியிடம்
சிக்கிய தோள்களும் மார்புகளும்
உரிமை என்ற பெயரில்
அனைவரின் முன்பும்
தற்கொலைச் செய்யப்படப்படும்.
No comments:
Post a Comment